நெல்லை மாவட்டம் முக்கூடல் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வது வார்டில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பெரியவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் காலை மாலை இருவேளையும் நடை பயிற்சி செய்தனர். கடந்த சில நாட்களாக பூங்கா திறக்கப்படாததால் பொது மக்கள் கர்ப்பிணி தாய்மார்கள் நடை பயிற்சி செய்ய முடியாமல் தவிக்கின்றனர். எனவே பூங்காவை மீண்டும் திறக்க பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்