முதியோர்கள் தற்போதைய காலக்கட்டத்தில் பல்வேறு விதத்தில் அவமதிப்பை சந்திக்கின்றனர். வயதானவர்களை பாரமாக கருதும் அவர்களின் உறவினர்கள் முதியோர்களை அடித்தல், கிள்ளுதல், கை, கால்களை முறுக்கி துன்புறுத்தும் செயலில் ஈடுபடுகின்றனர்,மேலும் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம் பேச விடாமல் தடுப்பது, பேரக்குழந்தைகளை அவர்களிடம் விளையாட விடாமல் தடுப்பது, ஒரே குடும்பத்தில் இருப்பவர்கள் கூட அவர்களிடம் யாரும் பேசாமல் இருப்பது போன்ற நிகழ்வுகள் மூலம் முதியோர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.