குடிக்க தண்ணீர் இல்ல.. செத்துகிட்டு இருக்கோம்

575பார்த்தது
குடிக்க தண்ணீர் இல்ல.. செத்துகிட்டு இருக்கோம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாட்டாகுடி கிராமத்தில் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். கிராமவாசி கூறும் போது, “இங்கு தண்ணீர் நிரந்திரம் கிடையாது, சாலை வசதியில்லை, பள்ளிக்கூடம் இல்லை. விவசாயத்தை நம்பியிருந்த இந்த கிராம மக்கள் பலர் வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டனர். 5000 பேர் வாழ்ந்த ஊரில் 50 பேர் தான் உள்ளோம். எங்கள் வாக்குகளை தேர்தலில் பயன்படுத்திக் கொண்டு இன்னும் அடிமட்டத்தில் வைத்துள்ளனர்” என்றார்.

தொடர்புடைய செய்தி