தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை அருகே செங்குளம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக் மகன் பாரத், தங்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த பால் பாண்டி மகன் சிவனேஸ்வரன். இவர்கள் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்கள் கொடுத்த புகாரில் கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்