பெரியகுளத்தில் சட்டமன்ற ஆய்வு குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
பெரிய குளத்தில் எம். எல். ஏ காந்திராஜன் தலைமையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வுப் பணிக்காக வருகை தந்துள்ள சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவினர் பெரியகுளம் கீழவடகரையில் வேளாண்மை துறை சார்பில் வேளாண் இயற்கை இடுபொருள் மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களின் நிறை குறைகளை கேட்டு தெரிந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்