ஆண்டிப்பட்டி - Andipatti

வருஷநாடு சாலையில் சுற்றித் திரியும் காட்டு மாடுகள்

வருஷநாடு சாலையில் சுற்றித் திரியும் காட்டு மாடுகள்

ஆண்டிபட்டி தாலுகாவுக்கு உட்பட்ட வருஷநாடு மலைச் சாலைகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வனத்துறை அறிவுறுத்தல். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா உட்பட்ட வருஷநாடு, மேகமலை, வெள்ளிமலை சாலைகளில் காட்டு மாடுகள் நடமாட்டம் உள்ளது. வனப் பகுதியில் மழையின்றி வறட்சி நிலவுவதாலும், பிரசவ காலம் என்பதாலும் காட்டு மாடுகள் தண்ணீா் தேடி குளம், குட்டை போன்ற நீா்நிலைப் பகுதிகளுக்கு கூட்டமாக வந்து செல்கின்றன. எனவே, நீா்நிலைகளை அடுத்துள்ள பகுதிகள், மலைச் சாலைகளில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் சென்று வர வேண்டும். வருஷநாடு மலைச் சாலை வழியாக அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட மலை கிராமங்களுக்குச் சென்று வரும் விவசாயிகள் பாதுகாப்புடனுடம், விழிப்புணா்வுடனும் இருக்க வேண்டும். மலைச் சாலையில் காணப்படும் காட்டு மாடுகளை விரட்டவோ, அருகில் சென்று புகைப்படம் எடுக்கவோ கூடாது என்று வனத்துறையினா் எச்சரித்தனா்.

வீடியோஸ்


தேனி
மனைவியை காணோம்.. மாமியார், மகளை சுட்டுக்கொன்ற கணவர் தற்கொலை
Apr 04, 2025, 11:04 IST/

மனைவியை காணோம்.. மாமியார், மகளை சுட்டுக்கொன்ற கணவர் தற்கொலை

Apr 04, 2025, 11:04 IST
கர்நாடக மாநிலம் சிக்மங்களூருவைச் சேர்ந்த ரத்னாக்கர் (40) என்பவருக்கும் அவரது மனைவிக்கு இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி தனது மகளுடன் தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனவேதனையில் இருந்துவந்த ரத்னாக்கர், சம்பவத்தன்று தனது மனைவியைத் தேடி மாமியார் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு மனைவி இல்லாத விரக்தியில், அங்கிருந்த தனது 7 வயது மகள், 26 வயது மைத்துனி, மாமியார் ஆகியோரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.