
ஆண்டிப்பட்டியில் பணிமனை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வளர்ந்து வரும் ஒரு நகரமாக உள்ளது. ஆண்டிபட்டியை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்கு பணிமனை இல்லாததால் தேனி மற்றும் பெரியகுளம் பணிமனைகளில் இருந்து வரக்கூடிய நகரப் பேருந்துகளை மட்டுமே, நம்பி ஆண்டிபட்டி பகுதி கிராமத்து மக்கள் உள்ளனர். இதனால் போதுமான பேருந்துகள் இல்லாததால் அவதி அடைந்தும் வருகின்றனர். எனவே உடனடியாக இங்கு பணிமனை அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.