ஆண்டிப்பட்டி அருகே பெண் கொலை; உறவினர்கள் போராட்டம்

52பார்த்தது
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மரிக்குண்டு பகுதியில் 65 வயது மூதாட்டி பவுன்தாய் என்பவர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் நேற்று (செப்.12) சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (செப்.13) அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை அவரது உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி