குடிநீரை காய்ச்சி குடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

78பார்த்தது
குடிநீரை காய்ச்சி குடிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
தேனி மாவட்டம் போடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி அரசு கள்ளர் துவக்கப்பள்ளியில் படிக்கும் 11 மாணவர்களுக்கும், உயர்நிலைப்பள்ளி அங்கன்வாடி மையத்தில் படிக்கும் இருவர் என 13 பேர் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு சுகாதாரத் துறையினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி