சமூக வலைதளங்களில் பின்தொடர்பவர்களுக்காக சிலர் ஆபத்தான பைக் ஸ்டண்ட் செய்து வருகின்றனர். கடந்த ஏப்ரல் 4ம் தேதி டெல்லியில் உள்ள ரஜோரி கார்டன் போலீஸ் நிலையத்தில் கிருஷ்ண கவுதம் என்ற இளைஞர் கேடிஎம் பைக்கில் ஆபத்தான ஸ்டண்ட் செய்தார். சாலையில் ஸ்டண்ட் செய்து வேகமாக விரைந்தார். 'ஸ்டண்ட் ரைடிங் குற்றமல்ல' என்ற தலைப்பில் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.