திருமணத்தை காரணம் காட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாகி கருக்கலைப்பு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஹரியானா மாநிலம் குருகிராமில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மூத்த சகோதரர் காதலன் மீது போலீசில் புகார் செய்தார். ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் குருகிராமில் தங்கியிருந்தபோது நாகினா மாவட்டம் கன்ஸ்லியைச் சேர்ந்த இளைஞருடன் நட்பு கொண்டார். கருக்கலைப்புக்காக இளம் பெண்ணை காதலன் சித்ரவதை செய்ததாக விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.