இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்!

83பார்த்தது
இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்!
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஜுன் 20) தொடங்குகிறது. கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். நாளை நீர்வளத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். பல்வேறு திட்டங்களின் விரிவாக்கம், புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் பேரவையில் குரல் எழுப்புவார்கள் என கூறப்படுகிறது. மாநிலத்தையே உலுக்கியுள்ள கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதமாக மாற்ற வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி