கோவிலுக்கு இளநீர் காவடி எடுத்து வந்த பக்தர்கள்

67பார்த்தது
கோவிலுக்கு இளநீர் காவடி எடுத்து வந்த பக்தர்கள்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று (ஜூன் 19) ஏராளமான பக்தர்கள் இளநீர் காவடி எடுத்து வந்தனர். மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் வலம் வந்து மலை மீது சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சண்முக நதி ஆற்றில் நீராடி ஊர்வலமாக மலையடிவாரத்தில் மேளதாளம் முழங்க பக்தர்கள் வந்தனர். கோவில் பாதுகாவலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தி மலை மீது அனுப்பி வைத்தனர். நேற்று பிரதோஷம் என்பதால் சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி