கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட மேலும் 94 பேர் புதுச்சேரி ஜிப்மர், சேலம், கள்ளக்குறிச்சியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. புதுச்சேரி ஜிப்மரில் ஏற்கனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.