நெல் கொள்முதல் விலை ரூ.2,300ஆக அதிகரிப்பு

67பார்த்தது
நெல் கொள்முதல் விலை ரூ.2,300ஆக அதிகரிப்பு
2024-25 காலாண்டின் காரிஃப் பருவத்திற்கான பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதன்படி, நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தி ரூ.2,300ஆக மத்திய அரசு அறிவித்துள்ளது. நெல், ராகி, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட 14 வகை பயிர்களுக்கான கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி