கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்களுக்கு இரவோடு இரவாக உடற்கூராய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவண்குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.