கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள்

84பார்த்தது
கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு விரைந்த அமைச்சர்கள்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அடுத்தடுத்த பலர் உயிரிழந்து வருகின்றனர். இதுவரை 13 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் உடல்நலன் குறித்தும் அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.

தொடர்புடைய செய்தி