இரவு உணவுக்காக தாயை கொன்ற மகன்

73பார்த்தது
இரவு உணவுக்காக தாயை கொன்ற மகன்
மத்தியப் பிரதேசம் மாநிலம் ரத்லம் மாவட்டம் சரவன் கிராமத்தைச் சேர்ந்தவர் மாலியா பீல் - ஜீவாபாய் தம்பதியினர். இவர்களுக்கு ஆஷா ராம்(30) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு ஜீவாபாய்க்கும் ஆஷா ராம்க்கும் இரவு உணவு அருந்துவது தொடர்பாக பிரச்னை எழுந்துள்ளது. அப்போது பிரச்னை பெரிதான நிலையில் மாலியா பீல் சண்டையை தீர்த்து வைத்துள்ளார். பின்னர் கோவித்துக்கொண்டு சென்ற ஆஷாராம் தந்தை தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்து தாய் ஜீவாபாயை கட்டையால் அடுத்து கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மாலியா பீல் அளித்த புகாரின் பேரில் தப்பி ஓடிய ஆஷாராமை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி