சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

82பார்த்தது
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள பிரபல சுற்றுலா தளமான சுருளி அருவியில், நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. தேனியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ள வனத்துறையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி