சிறுநீர் கழிக்கச்சென்ற மணமகனை கடித்த பாம்பு!

64பார்த்தது
சிறுநீர் கழிக்கச்சென்ற மணமகனை கடித்த பாம்பு!
உத்தரபிரதேச மாநிலத்தில் வசிக்கும் 26 வயதான அந்த இளைஞரின் பெயர் பிரவேஷ் குமார். இவருக்கும் பக்கத்துக்கு கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாளான வியாழக்கிழமை (ஜூலை 11) இரவில் முட்புதர் அருகே சிறுநீர் கழிக்கச்சென்றுள்ளார். சென்று நீண்ட நேரம் ஆகியும் திரும்பாததால் சந்தேகமடைந்து சென்று பார்த்தபோது பாம்பு கடித்து மயக்கமடைந்து கிடந்தார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி