சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள சவிதா கல்லூரி எம்பிஏ படிக்கும் மாணவர்கள் ரூ.3 லட்சம் கட்டணம் செலுத்திய நிலையில் பணம் செலுத்தவில்லை என நிர்வாகம் கூறியதால் நேற்று (மே 31) மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டணம் வசூல் செய்த 2 ஊழியர்கள் தலைமறைவான நிலையில், அவர்களிடம் பணத்தை பெற்று வந்து கட்டுமாறு நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், கல்வி கட்டணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக கூறி 5க்கும் மேற்பட்ட எம்பிஏ மாணவர்கள் இன்று (ஜூன் 1) சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.