தமிழ்நாட்டின் மாநில விலங்கான வரையாட்டினை பாதுகாப்பதற்காக வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னோடித் திட்டமான நீலகிரி வரையாடு திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12.10.2023 அன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இதனை பாராட்டி The Print ஆங்கில டிஜிட்டல் நாளிதழ்செய்தி வெயிட்டுள்ளது. இத்திட்டமானது வரையாடுகளின் எண்ணிக்கை, அவற்றின் வசிப்பிடப் பகுதிகள் மற்றும் நடத்தை முறை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.