பணத்தை அள்ளித் தரும் தபால் அலுவலக திட்டம்

53பார்த்தது
பணத்தை அள்ளித் தரும் தபால் அலுவலக திட்டம்
தபால் அலுவலகத்தின் சேமிப்புத் திட்டங்களில் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டில் பெரும் வருமானத்தை பெறலாம். இது வங்கிகளில் உள்ள ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தை விட அதிக லாபத்தை தருகிறது. அதேபோல, இதில் கிடைக்கும் வருமானத்திற்கு வரிச் சேமிப்பு சலுகையும் உள்ளது. இந்த திட்டத்தில் வருமான வரித்துறையின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.50 லட்சம் தள்ளுபடி பெறலாம். பொதுவாக வங்கிகள் 5 வருட FD திட்டத்திற்கு 7 முதல் 7.50 சதவீதம் வட்டி லாபம் தருகின்றன. ஆனால் தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டமானது அதை விட அதிக வருமானம் தருகிறது. இந்தத் திட்டத்தில் நீங்கள் ரூ.1000 முதலீட்டில் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் அதிக முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை.

தொடர்புடைய செய்தி