வாக்குதான் மிகப்பெரிய சக்தி என்று
பிரதமர் மோடி பேசியுள்ளார். நாட்டின் புதிய வாக்காளர்களிடம் அவர் பேசினார். 2047ஆம் ஆண்டுக்குள் நாட்டை வளர்ந்த
இந்தியா என்று பொன் எழுத்துக்களில் எழுத உங்களுக்கு சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும், அதற்கான பொறுப்பு உங்கள் மீது உள்ளது என்றும் அவர் கூறினார். நிலையான அரசாங்கம் அமையும் போதுதான் நாட்டுக்குத் தேவையான முக்கிய முடிவுகளை எடுக்க முடியும் எனவும், அதற்காக அனைவரும் வாக்களிக்கும் உரிமையை முறையாகப் பயன்படுத்த வேண்டும் எனவும்
பிரதமர் யோசனை தெரிவித்துள்ளார்.