மூடுபனியால் ரயில்கள், விமானங்கள் தாமதம்

78பார்த்தது
மூடுபனியால் ரயில்கள், விமானங்கள் தாமதம்
தலைநகர் டெல்லியில் மூடுபனியால் நிலைமை மோசமாக உள்ளது. ஏற்கனவே காற்று மாசுபாட்டால் தவித்து வரும் டெல்லி தற்போது பனிமூட்டத்தால் கடும் அவதியடைந்து வருகிறது. அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ரயில்கள் மற்றும் விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தாமதமாக புறப்படும் விமானங்கள் குறித்த தகவல் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி