28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்

51140பார்த்தது
28 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த காவலர்
அரியலூர் ஜெயங்கொண்டம் ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லீன்குமார் (28). ஆயுதப்படையில் இருக்கும் இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி