ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!

80பார்த்தது
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது!
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புக் கொண்டு ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரை கிண்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தேவராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரது உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி