ஆம்னி பஸ்சில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

82பார்த்தது
ஆம்னி பஸ்சில் சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
விருதுநகரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண், கோயம்புத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 28ஆம் தேதி இரவு விருதுநகரில் இருந்து ஆம்னி பஸ்சில் கோவைக்குச் சென்றார். மறுநாள் பஸ்சில் இருந்து அந்த பெண் கீழே இறங்கும்போது பஸ்சில் கிளீனராக பணிபுரிந்த சுபாஸ் சந்திரபோஸ் (41) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த பெண் சத்தம் போடவே, அவரை அழைத்துச் செல்வ வந்திருந்த உறவினர்கள் கிளீனரை கண்டித்தனர். தொடர்ந்து, அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்நபரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி