பரோட்டா சாப்பிட்ட நபர் பரிதாப சாவு

119446பார்த்தது
பரோட்டா சாப்பிட்ட நபர் பரிதாப சாவு
ஆவடி அருகே பாலவேடு, கோவிந்தராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலு (43). இவர் லேத் பட்டறை வேலை செய்து வருகிறார். இவருக்கு மஞ்சி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வேலை முடித்து வீட்டிற்கு செல்லும்போது ஒரு தனியார் உணவகத்தில் சால்னாவில் பரோட்டாவை ஊறவைத்து அதிக அளவில் சாப்பிட்டுள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், முதலுதவிக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அப்போது ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி