இரவோடு இரவாக அதிமுக கூட்டணியில் இணைந்த கட்சி

559பார்த்தது
இரவோடு இரவாக அதிமுக கூட்டணியில் இணைந்த கட்சி
மக்களவைத் தேர்தலையொட்டி தங்கள் கூட்டணியை இறுதி செய்யும் முயற்சியில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. சிறு கட்சிகள் பல அதிமுகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், அனைத்து மக்கள் அரசியல் கட்சி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா, கட்சி நிர்வாகிகளுடன் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ராஜேஸ்வரி பிரியா முன்னதாக பாமக கட்சியின் மாநில செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி