போலீசை அடித்து ஓடவிட்ட மணல் மாஃபியா - (வீடியோ)

571பார்த்தது
மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூர் மாவட்டத்தில் உள்ள பார்வதி ஆற்றின் அருகே பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பார்வதி ஆற்றின் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார், அவர்களைத் தடுக்கச் சென்றனர். அங்கு போலீசார் மீது மணல் மாபியாக்கள் தாக்கி, கற்களை வீசியும், வாகனங்களை நாசமாக்கியுள்ளனர். இதனால் போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி