பிரபல நடிகை தமன்னா விளம்பரம் ஒளிபரப்பும் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நகைகளை வாங்கி விற்கும் குறிப்பிட்ட அந்த நிறுவனம் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தன்னுடைய விளம்பரங்களை பயன்படுத்தி வருவதாக தமன்னா குற்றம்சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் தகுந்த பதில் அளிக்குமாறு அந்த நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 12 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.