மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நதீம் உதீன் என்ற நபர் தனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர், சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்று அருகில் இருந்த குப்பை கிடங்கில் புதைத்துள்ளார். கடந்த மே மாதம் 21ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், நதீம் உதீனை நேற்று (ஜூன் 1) கைது செய்தனர். உயிரிழந்த பெண்ணின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.