வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும்

55பார்த்தது
வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் நிறுத்த வேண்டும்
தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு இருப்பதற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் காரணம் என நடிகர் பிரகாஷ்ராஜ் அண்மையில் கூறியிருந்தார். இது குறித்து பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “வரலாற்றை திரித்துக் கூறுவதை பிரகாஷ்ராஜ் இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், இட ஒதுக்கீட்டுக்கு காரணம் கருணாநிதி என அவர் கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய முயற்சியால் மட்டுமே 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டது” என்றார்.

தொடர்புடைய செய்தி