விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்

53பார்த்தது
விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற நபர்
சென்னையில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட தயாரானபோது பயணி ஒருவர், எமர்ஜென்சி கதவினை திறக்க முயன்று அலாரம் அடித்ததால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரிடம் விமான பணிப்பெண்கள் விசாரித்தபோது, பட்டன் வித்தியாசமாக இருந்தது அதான் அழுத்திவிட்டேன் என வெள்ளந்தியாக பதில் கூறியுள்ளார். இருந்தாலும் அவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதனால் 159 பயணிகளுடன் டெல்லி புறப்பட இருந்த விமானம் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. இளைஞர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவருடைய பெயர் சரோஸ் என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி