பொதுமக்களை அச்சுறித்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.!

79பார்த்தது
பொதுமக்களை அச்சுறித்தி வந்த சிறுத்தை பிடிபட்டது.!
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டது. ஊருக்குள் புகுந்த சிறுத்தை ஆடு, மாடுகளை வேட்டையாடியது. இந்த நிலையில் சிறுத்தையைப் பிடிக்க, வனத்துறையினர் ஆங்காங்கே கூண்டுகளை வைத்து அதில் நாய்களையும் கட்டி வைத்திருந்தனர். நாயை பிடிப்பதற்காக வந்து சிறுத்தை கூண்டுக்குள் இன்று வசமாக சிக்கியது. மயக்க ஊசி செலுத்தப்பட்டு, சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.

தொடர்புடைய செய்தி