ஆட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்

58பார்த்தது
ஆட்களை ஏவி தந்தையை கொலை செய்த மகன்
நாகர்கோவில் அருகுவிளை வாட்டர் டேங்க்ரோட்டை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 65). தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ரத்த காயங்களுடன் கண்டெடுக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்த நிலையில், அவரது மகனை பிடித்து போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, தனக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. எனது தந்தை குழந்தை பெத்துக்க முடியாதவன் என அடிக்கடி கூறிவந்தார். 4 மாதங்களுக்கு முன் குழந்தை பிறந்தும் எனக்கு அவர் மீது ஆத்திரம் அடங்கவில்லை எனவே உடன் வேலை பார்த்த 2 பேரை வைத்து அவரை கொலை செய்ய முடிவெடுத்தேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி