பிரபல பஞ்சாபி நடிகர் குருசரண் சிங்கை(50) கடந்த 4 நாட்களாக காணவில்லை. தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், ஏப்ரல் 22ம் தேதி காலை 8:30 மணிக்கு டெல்லியில் இருந்து மும்பை செல்வதற்காக விமான நிலையம் சென்றுள்ளார். கடைசியாக விமான நிலையத்தில் அவரை சிலர் பார்த்துள்ளனர். ஆனால் அவர் மும்பை சென்றடையவில்லை. வீடும் திரும்பவில்லை. அவரது தொலைபேசியையும் அணுக முடியவில்லை. எனவே அவரை மீட்டு தருமாறு அவரது தந்தை டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.