திருநெல்வேலி டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே, 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்து புதைத்திருப்பதாக, காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு மர்ம நபர்கள் தப்பியுள்ளனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின் உடலை தேடி கண்டுபிடித்து மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்க அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.