கட்டிடத்தில் இருந்து குதித்த சிறுமி.. அதிர்ச்சி வீடியோ

20745பார்த்தது
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது ஆசிரியர் தன்னை சாதியின் பெயரால் அடிக்கடி துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். பட்டியலின மாணவி என்பதால் மற்ற மாணவிகளுடன் பேசிப் பழக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மாணவி, கடைசியாக, தான் தங்கியிருந்த விடுதி கட்டிடத்தின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மாணவியின் கால் எலும்புகள் உடைந்தன. பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கல்வி நிறுவன நிர்வாகம், காவல்துறை விசாரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி