பாம்பு தீண்டியதில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு

72பார்த்தது
பாம்பு தீண்டியதில் 18 வயது இளைஞர் உயிரிழப்பு
பீகார் மாநிலத்தின் ராஜன்பந்த் பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் துவாரிகா யாதவ். அவர் நேற்று (ஜூன் 25) இரவு தனது வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஊர்ந்து வந்த கொடிய விஷப்பாம்பு துவாரிகாவை தீண்டியது. இதில் வலியால் துடித்த அவர் சுயநினைவை இழந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் துவாரிகாவை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இளைஞர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

தொடர்புடைய செய்தி