கள் இறக்க அனுமதி கோரி மனு.. நீதிமன்றம் உத்தரவு

79பார்த்தது
கள் இறக்க அனுமதி கோரி மனு.. நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் பனையிலிருந்து கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நடராஜன் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்துளளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இது தொடர்பாக உள்துறை செயலாளர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. கள்ளில் 4.5 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். எவ்வளவுதான் புளிக்க வைத்தாலும் அதன் ஆல்கஹாலின் அளவு 13 க்கு மேல் செல்லாது. ஆனால் டாஸ்மாக் மதுவில் ஆல்கஹாலின் அளவு 42 இருக்கிறது என தென்னை விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி