தமிழகத்தில் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்குவதை தடுக்க கூடாது என உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தொடர்பான தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தமிழக அரசின் உத்தரவால் வெளிமாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறப்பட்டிருந்தது. இந்த வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரிட் மனு தொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.