விஷ சாராய விவகாரம் - சிபிசிஐடி முடிவு

61பார்த்தது
விஷ சாராய விவகாரம் - சிபிசிஐடி முடிவு
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 5க்கும் மேற்பட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. மேலும் இதுகுறித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். முக்கிய நபரான மாதேஷ், மொத்த வியாபாரியான ஜோசப் ராஜா, சின்னதுரை உள்ளிட்டோரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். 5 நாட்கள் காவல் கேட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி