மிசோரமில் கடந்த இரண்டு நாட்களில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்றால் மொத்தம் 160 பன்றிகள் இறந்துள்ளன. இதனால் பிப்ரவரி மாதத்தில் இருந்து இறந்த பன்றிகளின் எண்ணிக்கை 3,350ஐ தாண்டியுள்ளது. இதனையடுத்து பன்றிக் காய்ச்சலை தடுக்க நேற்று மற்றும் இன்று மட்டும் 300க்கும் மேற்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக கால்நடை பராமரிப்பு மற்றும் விலங்கு நலத்துறை தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இந்த வருடத்தில் தற்போதுவரை மொத்தமாக 6,504 பன்றிகள் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.