குளம் போன்ற நீர்நிலைகளில் குளிப்பவர்கள் உஷார்

53பார்த்தது
குளம் போன்ற நீர்நிலைகளில் குளிப்பவர்கள் உஷார்
கேரளா மாநிலம் கண்ணூரில் அமீபிக் மூளைத்தொற்றால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். மருத்துவமனையில் கடந்த 12ஆம் தேதி, நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு அமீபிக் மூளைத்தொற்று இருப்பது தெரியவந்தது. வாந்தி மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணூர் சாலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார். பொதுவாக இந்த அமீபாவால் பாதிக்கப்பட்டு 5 நாட்களில் அறிகுறி தெரியவரும் நிலையில் ஒன்றரை மாதம் கழித்து சிறுமிக்கு அறிகுறி தெரியவந்துள்ளது. நீர்நிலைகளில் இருந்து இந்த நோய்த்தொற்று பரவும் என்பதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி