கீழடியில் தமிழ் எழுத்துக்களுடன் பானை ஓடு கண்டெடுப்பு..!

80பார்த்தது
கீழடியில் தமிழ் எழுத்துக்களுடன் பானை ஓடு கண்டெடுப்பு..!
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றரை ஏக்கரில் 12 குழிகள் தோண்டப்பட்டுள்ளது. தற்போது 2 குழிகள் தோண்டப்பட்டுள்ள நிலையில், பாசி மணிகள், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட 27 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தற்போது ‘தா’ என்ற தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று முன்தினம் சென்னானூர் அகழாய்வில் உடைந்த புதிய கற்காலக் கருவி கிடைக்கப்பெற்றது.

தொடர்புடைய செய்தி