குடியரசு தலைவரை இன்று சந்திக்கும் தேர்தல் ஆணைய குழு!

61பார்த்தது
குடியரசு தலைவரை இன்று சந்திக்கும் தேர்தல் ஆணைய குழு!
குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய குழு சந்திக்க உள்ளது. அரசியல் சாசன சட்டப்படி, தேர்தல் ஆணையம் குடியரசு தலைவரை சந்தித்து புதிய எம்.பி.க்கள் பட்டியலை வழங்க வேண்டியது அவசியமாகும். அதன்படி, புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை முர்முவிடம் தேர்தல் ஆணைய குழு வழங்க உள்ளனர். பட்டியலை அடிப்படையாக கொண்டு 18வது மக்களவை, புதிய ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை குடியரசு தலைவர் தொடங்குவார்

தொடர்புடைய செய்தி