பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் வசித்துவரும் சீமா தேவி என்ற பெண் 4 குழந்தைகளுக்கு தாயாவார். இவரது கணவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரயிலில் விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து தனிமையில் இருந்த சீமா தேவிக்கு தனது சொந்தக்கார சகோதரியின் மாமனார் மீது காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தங்களது காதலை பரிமாறிக்கொண்டுள்ளனர். இந்த விஷயம் உறவினர்களுக்கு தெரியவரவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நாங்கள் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வோம் என கூறி காவல் நிலையத்திற்கு சென்று போலீசாரின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.