விபத்து.. லாரி ஓட்டுனரின் கிரிமினல் பிளான் வீடியோ

5164பார்த்தது
நாகர்கோவில் அருகே நடந்த சாலை விபத்தில் கேபிள் ஆப்ரேட்டர் உயிரிழந்த நிலையில், அதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் தணுமலயா பெருமாள் உயிரிழந்தார். அவரது நண்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு சென்ற லாரி ஓட்டுநர் மில்டன் லாரியுடன் போலீசில் ஆஜராகியுள்ளார். பின்னர் சிசிடிவி காட்சியை பார்த்தபோது விபத்து ஏற்படுத்தியது வேறு லாரி எனவும் அந்த லாரிக்கு தகுந்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால், ஆவணங்கள் இருக்கும் லாரியில் கோழி ரத்தத்தை தெளித்து எடுத்துவந்து தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி