மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் பைசல் அப்துல்லா பாவத் (25). இவரை காணவில்லை என அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து இவரது உடல் அழுகிய நிலையில் அழகர்கோவில் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆத்திக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் (19) என்ற மாணவரை பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. இருவருக்கும் ஓரினச்சேர்க்கை பழக்கம் இருந்ததும், இதனை வீடியோ எடுத்த பைசல் இணையத்தில் வெளியிடப்போவதாக மிரட்டிய நிலையில், அழகர்கோவில் பகுதிக்கு அழைத்து சென்று மலையில் இருந்து தள்ளிவிட்டு கத்தியால் குத்தி கொலைசெய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.